இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலையா? கொலையா? என விசாரித்து வரும் நிலையில் தற்போது தீப்தி அறையில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் தீப்தி தனது கணவருடன் தொடர்ந்து நடந்து வந்த தகராறுகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒரு உறவில் அன்பும் நம்பிக்கையும் இல்லை என்றால், அந்த உறவைத் தொடரவும் வாழவும் என்ன காரணம் இருக்கிறது என்று அவர் எழுதியுள்ளார். தீப்தியும் ஹர்பிரித்தும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.