ரேவதி ஆபரேஷனில் ஏற்பட்ட சிக்கல்... கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Published : Sep 24, 2025, 05:15 PM IST

Karthigai Deepam 2 Serial September 24th Episode Update: கார்த்திகை தீபம் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில், ரேவதி ஆபரேஷனில் சிக்கல்  ஏற்பட்ட நிலையில், இன்று நடக்கப்போவது குறித்து பார்ப்போம்.

PREV
14
மருத்துவரிடம் கெஞ்சும் கார்த்திக்:

அதாவது, மருத்துவர்கள் ரேவதிக்கு ஆபரேஷன் செய்ய அறிவுறுத்தி இருந்தாலும், ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர், அமெரிக்கா செல்ல இருப்பதால் அவரால் அந்த ஆபரேஷனை செய்ய முடியாது என கூறுகிறார். இந்த விஷயத்தை அறியும் கார்த்திக், ரேவதிக்கு ஆபரேஷன் செய்துவிட்டு அமெரிக்கா செல்லும்படி மருத்துவரிடம் கெஞ்சுகிறான். இதனால் அவருக்கு ஏற்படும் நஷ்டத்தை தானே கொடுப்பதாகவும் கூறுகிறான்.

24
ஐசியூவில் கந்த சஷ்டி கவசம்:

கார்த்தியின் முயற்சிகள் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் முருக பக்தர்கள் ஹாஸ்பிடலுக்கு வந்து ஐசியூவில் கந்த சஷ்டி கவசம் படித்து ரேவதிக்கு பிரசாதம் வைத்து விடுகின்றனர். கூடிய விரைவில் குணமடைந்து விடுவாள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ஆசியுடன்... சினிமாவில் கால்பதிக்கும் ஜெர்மனி வம்சாவெளியை சேர்ந்த தமிழன்!

34
மாரியை தேடி செல்லும் கார்த்திக்:

மேலும் ரேவதிக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் அது அரிய வகை ரத்தம் என்பதும் மாரி என்பவருக்கு அந்த வகை ரத்தம் இருப்பதும் தெரியவந்து மாரியை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். பிறகு கார்த்திக் நானே நேரடியாக வந்து உங்களை அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறான்.

சண்முகத்தை கொல்ல முடிவெடுத்த வைஜெயந்தி - அடுத்தடுத்து காத்திருக்கும் திருப்பம் ? அண்ணா சீரியல் அப்டேட்!

44
உண்மையை உடைக்கும் காளியம்மா:

அடுத்ததாக காளியம்மாள் வீட்டுக்கு வரும் சிவனாண்டி, மாயா ரேவதியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிய விஷயத்தை சொல்கிறான். இதை கேட்டதும் காளியம்மா சிரித்தபடி, மாயா இந்த வீட்டில் தான் இருக்கிறாள் என்ற உண்மையை உடைக்கிறாள். தொடர்ந்து பேசும் காளியம்மா, ரேவதி இறந்த செய்தி கேட்டால் தான் தனக்கு சந்தோஷம் என கோவமாக சொல்கிறாள். இப்படியான நிலையில், அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்.

இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு; அதுக்குள்ள வேலைக்கு வரவானு கேட்ட தங்கமயிலின் அப்பா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories