பாடல் மூலம் அன்பை காட்டிய யுகபாரதி
இயல்பிலேயே ஏற்படும் அழுத்தங்களை குழந்தைகள் வெளிப்படுத்தவில்லை என்றால் அவர்கள் diplopia-வால் பாதிக்கப்படுவார்களாம். பின்னர் ஊசிபோட்ட பின் தலைவலி குறைந்துவிட்டது. ஆனால் மகளின் கண்பார்வையில் உள்ள பிரச்சனை மட்டும் தீரவில்லையாம். அது குணமடைவதை உறுதியாக சொல்ல முடியாது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம். அப்போது அமரன் படத்திற்கு பாடல் எழுத வேண்டிய சூழல் வர, மகள் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக வென்னிலவு சாரல் நீ என்கிற பாடலை எழுதி இருக்கிறார் யுகபாரதி.
“பாதி நீயே என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே
ஆதி நீயே என் ஆயுள் நீயே
ஆணி வேரை நீங்காது மண்ணே
எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே
கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காட்சியே”
என்கிற வரிகள் தன் மகளுக்காக எழுதியது என யுகபாரதி கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... வித்யாசாகரை கோபத்தில் கண்டபடி திட்டி யுகபாரதி எழுதிய பாட்டு - சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?