கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நயன்தாரா, யாஷ், ஹுமா குரேஷி ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் டாக்ஸிக் திரைப்படம் மார்ச் 19-ந் தேதி ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் படம் 'டாக்ஸிக்'. யாஷ் - கீது மோகன்தாஸ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ரத்தம் தோய்ந்த குளியல் தொட்டியில் கரடுமுரடான தோற்றத்தில் யாஷ் போஸ்டரில் இருந்தார். முகம் தெரியவில்லை என்றாலும், ஒரு ஒளிக்கீற்றால் பிரகாசமாக அவர் வெளியே பார்க்கிறார். அவரது உடல் டாட்டூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, மேலும் இந்த போஸ்டர் அவரது கதாபாத்திரத்தைக் குறிக்கும் ஒரு கச்சிதமான பேடாஸ் வைபை கொடுத்தது.
25
தாமதமாகும் டாக்ஸிக் ரிலீஸ்
பின்னர் யாஷின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் டீசரும் வெளியிடப்பட்டது. கவர்ச்சியான காட்சிகளால் அந்த டீசர் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது. சமீபத்தில் யாஷின் 'டாக்ஸிக்' படத்தின் புதிய டீசர் வெளியானது. புதிய டீசரில் கண்கவர் ஆக்ஷன் மற்றும் வன்முறைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் மார்ச் 19ந் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
35
டாக்ஸிக் தள்ளிவைக்கப்பட்டது ஏன்?
ஆனால், ரிலீசுக்கு பதினாறு நாட்களே உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. துரந்தர் 2 படத்துடன் போட்டிபோட பயந்து இப்படம் தள்ளிப்போகவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமே இதற்குக் காரணம். இதன் புது ரிலீஸ் தேதியும் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் ஜூன் 4ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யாஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பதை டீசர் வெளிச்சம் போட்டு காட்டியது. டீசரின் இறுதிக் காட்சியில் யாஷ் வேறு ஒரு தோற்றத்திலும் காணப்படுகிறார்.
'டாக்ஸிக்' உலகை முதன்முதலில் அறிமுகப்படுத்தும்போது, யாஷ் தன்னை பின்னுக்குத் தள்ளி, கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா போன்ற பெண் கதாபாத்திரங்களை முன்னுக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதைக்களம்தான் 'டாக்ஸிக்' என்பதற்கான முதல் அறிகுறி அதுவாக இருந்தது. இப்போது, அந்த உலகின் மைய சக்தியாக ராயா என்ற கதாபாத்திரம் அறிமுகமாகும் போது, 'டாக்ஸிக்' மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
55
டாக்ஸிக் டீம்
யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து திரைக்கதை எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கும் இந்தப் படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் பதிப்புகள் தயாராகி வரும் இப்படம், உலகளாவிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. படத்திற்கு தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு சிறந்த குழு உள்ளது. தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி (ஒளிப்பதிவு), ரவி பஸ்ரூர் (இசை), உஜ்வல் குல்கர்னி (எடிட்டிங்), டி.பி. ஆபித் (தயாரிப்பு வடிவமைப்பு). ஆக்ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குனர் ஜே.ஜே. பெர்ரி (ஜான் விக்), தேசிய விருது பெற்ற அன்பறிவ் மற்றும் கேச்சா கம்பாக்டி ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர். வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN புரொடக்ஷன்ஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பேனர்களின் 'டாக்ஸிக்' படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.