ரச்சிதா தன்னுடைய கனவுகள் குறித்து பிக்பாஸ் தொடக்கவிழாவிலேயே பேசி இருந்த நிலையில், தற்போது அவருடைய குடும்ப பின்னணி பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர், தனக்கு படிப்பு பெரிதாக வரவில்லை என்றும், தான் கூட்டு குடும்பத்தில் இருந்ததால் தன் பெற்றோருக்கு நிறைய நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அப்போது ஒருமுறை, தான் நன்றாக படிக்காததால் தன்னை தன் பெற்றோர் பல முறை அடித்துள்ளதாகவும், கழுத்தை நெரித்து நீ செத்துவிடு என சொல்லி மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.