
திரையுலகில் பல அரிய ஜோடிகள் வெள்ளித்திரையில் கலக்கியுள்ளன. ஆனால் சில ஜோடிகள் இதுவரை திரையில் காணப்படவில்லை. அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் பிரபாஸ் சமந்தா ஜோடியும் ஒன்று. இருவரும் இதுவரை படங்களில் இணைந்து நடிக்கவில்லை. காரணம் என்ன தெரியுமா?
பான் இந்தியா நட்சத்திரமாக பிரபாஸ் வலம் வருகிறார். டோலிவுட்டில் சிறிய ஹீரோவாக இருந்து பான் உலகப் புகழ் பெற்றது வரை, தனது நீண்ட திரைப்பட வாழ்க்கையில் பல முன்னணி நாயகிகளுடன் நடித்துள்ளார். ஆனால் சமந்தாவுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை பிரபாஸ். மறுபுறம் சமந்தாவும் குறைந்தவர் அல்ல. தென்னிந்தியாவில் அவருடைய கிரேஸ் அளவிட முடியாதது.
தெலுங்கு, தமிழ் மொழிகளில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற சமந்தா, இப்போது பாலிவுட்டையும் கவர்ந்து வருகிறார். பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். இப்படி பார்த்தால் பிரபாஸைப் போலவே சமந்தாவும் பான் இந்தியா நாயகிதான். தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் திரையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
டோலிவுட்டில் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, பவன் கல்யாண், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி ஹீரோக்களுடன், நாக சைதன்யா, நானி, விஜய் தேவரகொண்டா போன்ற இரண்டாம் நிலை ஹீரோக்களுடனும் நடித்து அசத்தியுள்ளார் சமந்தா. தமிழைப் பொறுத்தவரை, சூர்யா, தனுஷ், விஜய், விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா.
பிரபாஸைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தெலுங்கு, தமிழ், இந்தியில் முன்னணி நாயகிகளுடன் நடித்துள்ளார். இருப்பினும், இவ்வளவு காலமாக தெலுங்கு சினிமாவிலும், பான் இந்தியா சினிமாவிலும் நடித்து வந்தாலும், இந்த ஜோடி இதுவரை இணையாததற்கு காரணம் என்ன தெரியுமா? அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், பிரபாஸ், சமந்தா இடையே உயர வித்தியாசம் அதிகம்.
இருவரும் இணைந்து நடிக்கும் படத்தைப் பார்க்க பல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். சமூக ஊடகங்களிலும் பல கருத்துகள் எழுந்தன. ஆனால் இருவரும் இணைந்து நடிக்காததற்கு காரணம் பிரபாஸின் உயரம். ஆம், பிரபாஸ் 6 அடி உயரம் என்றால், சமந்தாவின் உயரம் 5.2 அடி. இதனால்தான் இவர்கள் இருவருடனும் சேர்ந்து படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை.
பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் முதலில் சமந்தாவைத்தான் ஹூரோயினாக போட நினைத்தார்களாம். ஆனால் உயரப் பிரச்சினையால் இந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் அழகி ஷ்ரத்தா கபூர் நடித்ததாகத் தெரிகிறது. இனிமேல் இவர்கள் இணையும் வாய்ப்பு இல்லை என்றுதான் நினைக்க வேண்டும். ஏதாவது அதிசயம் நடந்தாள் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.
பிரபாஸ் தற்போது ராஜா சாப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் பிரபாஸின் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
அத்துடன் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ராணுவம தொடர்பான படத்தில் நடித்து வருகிறார். சந்தீப் ரெட்டி வங்காவுடன் ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2 ஆகிய படங்களையும் பிரபாஸ் செய்ய வேண்டியுள்ளது. இப்படி ஐந்தாறு வருடங்கள் பிரபாஸைப் பிடிப்பது கஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாலிவுட்டில் தொடர்ந்து பல புதிய படங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகிறார் சமந்தா. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா, மீண்டும் பிஸியாகப் போகிறார்.