இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸை வைத்துள்ள, இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவென்யூ பகுதியில் தான் வசித்து வந்தார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, நடிகை பவுலினின் சகோதரர் தினேஷ் தற்போது இவரது தற்கொலை குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் .போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது.