இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதை கருத்தில் கொண்டு, அங்கு மீண்டும் திரையரங்குகளை திறக்க உள்ளனர். ஐநாக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து 3 திரைகளுடன் கூடிய பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கப்பட உள்ளது. மொத்தம் 522 பேர் அமர்ந்து படம் பார்க்கக்கூடிய வகையில் இந்த திரையரங்குகள் கட்டப்பட்டு உள்ளன.