Biggboss 5: பிக்பாஸ் வீட்டிலிருந்து 5 லட்சத்துடன் வெளியேற போவது இவரா? இப்போதே கணித்து கூறிய நெட்டிசன்கள்!

First Published Dec 26, 2021, 10:50 AM IST

பிக்பாஸ் வீட்டில் (Biggboss 5 tamil) இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த முறை 5 லட்சம் பணத்துடன் எந்த போட்டியாளர் வெளியேற உள்ளார் என்பதையும் இப்போது கணித்து கூற துவங்கி விட்டனர் நெட்டிசன்கள்.

கடந்த நான்கு சீசனை விட, 5 ஆவது சீசனில்...  பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கணித்து கூறுவது அப்படியே நடந்து வருவதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக இமான் அண்ணாச்சியின் வெளியேற்றத்தை தவிர... மற்ற வாரங்களில் நெட்டிசன்கள் கணித்து கூறிய போட்டியாளர்களே இதுவரை வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக... டபுள் எவிக்ஷன் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷனில், முத்த சர்ச்சையில் சிக்கிய அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால்... டாஸ்குகள் கடுமையாகி வருகிறது. அதே போல் அடுத்தடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னென்ன நடக்கும் என்பதையும் கணித்து கூற துவங்கியுள்ளனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக வரவுள்ள... டாஸ்குகளில் ஒன்று 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு வெளியேற பிக்பாஸ் வாய்ப்பு வழங்கும், இதனை எந்த போட்டியாளரும் ஏற்காத பட்சத்தில் அது பத்து லட்சரூபாயாக மாற்றப்படும், பணத்துடன் வெளியேற விரும்பும் போட்டியாளர் தாராளமாக வெளியேறலாம்.

கடந்த சீசனில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வெளியேறியவர் கேப்ரில்லா... இந்நிலையில் இந்த முறை யார் வெளியேறுவார் என்பதை கணித்து கூற துவங்கியுள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்.

அந்த வகையில் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அமீர் 5 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேற வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. நெட்டிசன்கள் கணித்து கூறுவது இதிலும் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!