தளபதிக்கே தளபதியாக இருப்பவர்! யார் இந்த புஸ்ஸி ஆனந்த்... விஜய்யுடன் நெருக்கமானது எப்படி?

Published : Jul 14, 2023, 02:49 PM IST

விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய்யுடன் நெருக்கமானது எப்படி என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
தளபதிக்கே தளபதியாக இருப்பவர்! யார் இந்த புஸ்ஸி ஆனந்த்... விஜய்யுடன் நெருக்கமானது எப்படி?

புதுச்சேரியை சேர்ந்தவர் புஸ்ஸி ஆனந்த். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர் புதுவை மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான அஷ்ரப்பிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். அதேபோல் அங்கு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்திருக்கிறார். இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆனந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அங்குள்ள புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டார் ஆனந்த்.

24
bussy anand

புஸ்ஸி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனதன் காரணமாக அவருக்கு புஸ்ஸி ஆனந்த் என அனைவராலும் அழைக்கப்பட்டார். அந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த புஸ்ஸி ஆனந்திற்கு, எஸ்.ஏ.சந்திரசேகருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக தான் செய்த நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறியதும், அவர் புஸ்ஸி ஆனந்தை விஜய்யிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... மிஸ் யூ Daddy.. So எனக்கும் சேர்த்து ஒரு கேக் பீஸ் சாப்பிடுங்க - ஆசையோடு அப்பாவுக்கு வாழ்த்து சொன்ன வரலக்ஷ்மி!

34
bussy anand

பின்னர் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்த தொடங்கியதை அடுத்து விஜய்யுடனும் நெருக்கமாகிவிட்டாராம். ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் அனுமதியுடன் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டியதை பார்த்து கடுப்பான விஜய், அவர்களையெல்லாம் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்குமாறு சொல்ல, புஸ்ஸி ஆனந்தும் அதை செய்திருக்கிறார். இதுவே விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியது.

44
bussy anand

அரசியலில் அனுபவமுள்ள புஸ்ஸி ஆனந்திடம் சொல்லி வார்டுகள் தோறும் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த சொல்லினாராம் விஜய். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் செய்த தீவிரமான களப்பணியைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட 169 பேரில் 115 பேர் வெற்றி வாகை சூடி விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து தான் விஜய்க்கு அரசியல் ஆர்வம் வந்தது. தற்போது விஜய்யை அரசியலில் களமிறக்குவதற்கான அனைத்து வேலைகளையும் முன் நின்று செய்து வருவதும் புஸ்ஸி ஆனந்த் தான். அவரைப் போலவே அரசியலில் விஜய்யை ஜெயிக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Maveeran Review : பேண்டஸி கதைக்கு செட் ஆனாரா சிவகார்த்திகேயன்? மாவீரன் படத்தின் முழு விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories