நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்தபோது அவரை நீங்கள் ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று அடித்தீர்களா என்று சங்கீதா கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த பாலா, நான் அஜித்தை அடித்தேன் என்று சொல்வதெல்லாம் பத்திரிகையாளர்களின் கற்பனை. ஆனால் அதே சமயம் எனக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்தது உண்மை தான் என்று பாலா சொன்னதும், அந்த அறையில் என்ன நடந்தது என சங்கீதா கேட்க, அது அல்டிமேட்டிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் ஏன் கேட்குறீங்க என சொல்லிவிட்டார் பாலா. இருந்தாலும் அந்த அறையில் நடந்த பிரச்சனை என்பது இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது.