தமிழில், 'ஆம்பள' படத்தில் மட்டுமே மாதவி லதா நடித்திருந்தாலும், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
undefined
அவ்வப்போது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் சில கருத்துகளையும் வெளியிட்டு வருபவர். சமீபத்தில் கூட தெலுங்கு பிரபலங்களின் விருந்து விழாக்களில்... போதை பொருட்கள் பயன்படுத்த படுவதாகவும், இது குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
undefined
இந்த நிலையில் மாதவி லதா சைபராபாத் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சிலர் சித்தரித்து அவதூறு பரப்பி வருவதாக புகார் அளித்துள்ளார்.
undefined
இதுகுறித்து மாதவி லதா அளித்துள்ளார் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. "ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை கண்டித்து பேசினேன். அதன் பிறகு சிலர் மர்ம நபர்கள் தலைத்தளத்தில் என்னை மோசமாக திட்டு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
undefined
எனது புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி உள்ளனர். எனது நடத்தை பற்றியும் கேவலமாக பேசுகிறார்கள். இதனால் சொந்த வாழ்க்கை மிகவும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
undefined