ராமராஜன் - நளினி விவாகரத்துக்கு விக்ரம் பட நடிகை தான் காரணமா?

First Published Sep 2, 2022, 3:09 PM IST

 80களில் முன்னணி நடிகராக இருந்த, ராமராஜன் அவரது காதல் மனைவியும் நடிகையுமான நளினியை விட்டு பிரிவதற்கு, விக்ரம் பட நாயகி தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், பேட்டி ஒன்றின் மூலம் இந்த வதந்திக்கு அந்த நடிகை முற்று புள்ளி வைத்துள்ளார். அந்த நடிகை யார்? எதனால் அவர் ராமராஜன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் என்பதை விரிவாக பார்ப்போம்.
 

ஒரு துணை இயக்குனராக திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் ராமராஜன். அப்போது நளினி நடித்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியபோது... இருவருக்கும் இடையே காதல் பற்றி கொண்டது. ராமராஜன் மிகவும் அன்பான மனிதராம். அனைவரையும் சாப்பிடீர்களா என்று கேட்கும் குணம் உடைவயவர். இந்த வார்த்தை தான் நளினியை ராமராஜன் காதல் வலையில் விழ வைத்தது.

இயக்குனராக வேண்டும் என்று திரையுலகில் காலடி எடுத்து வைத்தாலும், தொடர்ந்து சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் 'மண்ணுக்கேத்த பொண்ணு' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தில், பாண்டியன், இளவரசி, கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கி முடித்த அடுத்த ஆண்டே... தமிழ் சினிமாவில், 1986 ஆம் ஆண்டு 'நம்ப ஊரு நல்ல ஊரு' படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இவரது முதல் படமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே... இயக்குனர் என்பதை தாண்டி நடிப்பிலும் பிஸியான. முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்த பின்னர், நடிகை நளினியை திருமணம் செய்து கொள்ள அவர்களது பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அந்த காலத்தில் இவரகளது காதல் விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்றாகவும் மாறியது.

திருமணம் ஆகி, 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள்... திடீர் என குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்கள், விவாகரத்துக்கு காரணம், நடிகை ஒருவருடன் ராமராஜனுக்கு ஏற்பட்ட பழக்கம் தான் என கிசுகிசுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் ராமராஜன் அரசியலிலும் மிக முக்கிய பங்கு வகித்தார். நளினியும் ராமராஜனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், தன்னுடைய இரட்டை குழந்தைகளை வளர்ப்பதற்காக மீண்டும் நடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில், ராமராஜன் அனைத்தையும் இழந்து உடல் நலம் குன்றிய போது கூட, காதல் கணவர் ராமராஜனை மீண்டும் நட்பு ரீதியாக கை கொடுத்து உதவினார். அவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் கவனித்து கொண்டார். 

தற்போது வரை கணவன் மனைவியாக இருவரும் வாழ விரும்பவில்லை என்றாலும், குழந்தைகளுக்காக அவ்வப்போது சந்தித்து நட்பு ரீதியில் பழகி வருகிறார்கள். மகன் - மகள் விசேஷங்களில் ஒரு போதும் ராமராஜன் இல்லாமல் நடப்பது இல்லை.

இந்நிலையில், ராமராஜன் அவரது மனைவி நளினியை விட்டு பிரிவதற்கு, 'சீறிவரும் காளை' படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த  'சேது' பட நாயகி அபிதா தான் கரணம் என, ஒரு தகவல் திரையுலகை சுற்றி வர, இதற்க்கு அபிதா ஒரு பேட்டி மூலம் பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... ராமராஜன் - நளினி விவாகரத்துக்கு நான் ஒருபோதும் காரணமில்லை. நான் ஷூட்டிங் முடிந்தால் உடனே என் அறைக்கு சென்றுவிடுவேன், நளினியை நேரில் கூட பார்த்தது இல்லை. என்னை பற்றி இப்படி வதந்தி பரப்பியது வருத்தமாக இருக்கிறது என ஆதங்கத்தோடு கூறியுள்ளார். 

அபிதாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைத்தால், சீரியலின் பக்கம் சென்றார். அந்த வகையில் இவர் நடித்த 'திருமதி செல்வம்' தொடர் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து, முழு நேர சீரியல் நாயகியாகவே மாறினார். தற்போது 'மாரி' என்கிற தொடரில், அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!