தமிழகத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விக்ரமை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆனந்த கூத்தாடி வந்தனர்.
விக்ரமின் நடிப்பு பலத்த பாராட்டுகளை பெற்ற போதிலும் படத்தில் தேவையான சுவாரஸ்யம் இல்லை என்கின்ற மோசமான விமர்சனங்களும் வந்துள்ளன. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் வெளியான முதல் நாளிலேயே டெலிகிராம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.