அப்பாடா விட்டது தலைவலி... விஜய்சேதுபதியால் படாத பாடுபட்ட படக்குழு நிம்மதி ...!

First Published Dec 3, 2020, 11:58 AM IST

லாபம் படத்தில் விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் முடிக்கப்பட்டுள்ளதால படக்குழு மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து தப்பியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எஸ்.பி.ஜனநாதன் உடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லாபம். இதில் அவருக்கு ஹீரோயினாக நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
undefined
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் சேதுபதி ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளதை கேள்விப்பட்ட ஏராளமான ரசிகர்கள் அவரை காண்பதற்காக திரண்டனர்.
undefined
கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நாள்தோறும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்தது பீதியை உருவாக்கியது. இதனால் நடிகை ஸ்ருதி ஹாசன் ஷூட்டிங்கை விட்டு பாதியில் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
undefined
தனது ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவர் விஜய் சேதுபதி என்பதால் அவருடன் போட்டோ எடுப்பதற்காக ரசிகர்கள் குவிந்தனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசாரை அழைக்கும் நிலைக்கு படக்குழு தள்ளப்பட்டது.
undefined
இந்நிலையில் விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகளை ஒரு வழியாக படமாக்கி முடித்துவிட்டார்கள். இறுதிநாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
இதைப் பார்க்கும் சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக இடைவெளி என்ற ஒன்றையே இவர்கள் மறந்துவிட்டார்களா? கொரோனா தொற்று மீதான பயம் கொஞ்சம் கூட இல்லையே என விமர்சித்து வருகின்றனர்.
undefined
ஆனால் விஜய் சேதுபதியின் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டதால் அவர் சென்னை திரும்பிவிட்டார், இனி ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவையில்லாத கூட்டம் கூடாது என்பதால் படக்குழு சற்றே நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது.
undefined
click me!