அதில் நடிகர் விஜய் நேற்று இரவே கோட் படத்தின் சிறப்பு காட்சியை கண்டுகளித்தாராம். சென்னை அடையாறில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு தன்னுடைய மனைவி சங்கீதா, மகன், மகள் மற்றும் தன்னுடைய பெற்றோர் ஆகியோருடன் வந்து கோட் படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் விஜய் கண்டுகளித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் சிலரும் அப்போது உடன் இருந்ததாக கூறப்படுகிறது.