கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விதார்த் மற்றும் மூத்த தமிழ் திரையுலக இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் வெளியான "குரங்கு பொம்மை" என்கின்ற த்ரில்லர் திரைப்படத்தை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இயக்குனர் தான் நிதிலன் சுவாமிநாதன் .கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து அவர் பிரபல நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் தான் மகாராஜா. இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியாகி அவருக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெற்று தந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் இயக்குனர் நிதிலனை நேரில் அழைத்து பாராட்டியது அனைவரும் அறிந்ததே.