
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". இதில் இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ள தளபதி விஜய், வழக்கம் போல தன்னுடைய ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு ஆளாகியுள்ளார். படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என்று பல சுவாரசியங்களை புகுத்தி மீண்டும் தான் ஒரு கமர்சியல் கிங் என்பதை நிரூபித்திருக்கிறார் வெங்கட் பிரபு.
குறிப்பாக இந்த திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த அரசியல் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் இணைக்கப்பட்ட காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கூட சமரசம் செய்துகொள்ளாமல் "வீ மிஸ் யூ கேப்டன்" என்ற வசனத்தோடு வந்த விஜயகாந்தின் காட்சிகள் திரையரங்குகளை அதிர வைத்தது.
அது மட்டுமல்ல தல அஜித்தின் ரெபிரென்ஸ், தோனியின் கேமியோ, நடிகை திரிஷாவின் நடனம் என்று ஒரு டோட்டல் கமர்சியல் பேக்கேஜாக இந்த கோட் திரைப்படம் அமைத்துள்ளது என்றே கூறலாம்.
விலை உயர்ந்த நிச்சயதார்த்த வைர மோதிரத்தோடு சோபிதா வெளியிட்ட போட்டோஸ்! சைதன்யா கொடுத்த ரியாக்ஷன்!
முதல் நாள் உலக அளவில் சுமார் 126.23 கோடி வசூல் செய்த "கோட்" திரைப்படம், இரண்டாவது நாளில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது என்று கூறப்படுகிறது. வார இறுதி நாட்கள் நாளையுடன் முடியவுள்ள நிலையில், கோட் திரைப்படம் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸை தொடுமா என்கின்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது என்றே கூறலாம். உலக அளவில் ஆன வசூல் ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாக கோட் திரைப்படம் குறித்த பல சுவாரசியமான சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறார் வெங்கட் பிரபு.
அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகை சங்கீதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய இயக்குனர் பிரபு, திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் எஸ்.கே. ஆகிய இருவர் இடையே வரும் அந்த கட்சி குறித்து பேசியுள்ளார். "இந்த பில்டிங்கில் இருக்கும் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் சிவா, துப்பாக்கியை நீங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். மோகன் தப்பித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" இது தான் நான் கொடுத்த வசனம்.
ஆனால் டேக்கில் அதை சுவாரசியமாக மாற்றியது தளபதி தான். உண்மையில் யாருக்கு அப்படி பேச மனசு வரும் என்று எனக்கு தெரியவில்லை. தளபதி, சிவா மீது உண்மையான அன்புகொண்டவர், சிவா ஒரு விஜயின் Fan Boy, அதனால் தான் அந்த கட்சி அவ்வளவு சுவாரசியமாக அமைந்தது.
ஆனால் இதில் இன்னொரு சுவாரசியம் அடங்கி இருக்கிறது, சிவா பேசும்போது "உங்களுக்கு இதை விட பெரிய வேலை இருக்கிறது, நீங்கள் அதை பார்த்துக்கொள்ளுங்கள். நான் இதை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல, அவருக்கு தம்ஸ்அப் காட்டிவிட்டு அங்கிருந்து நகர்வார் தளபதி. ஆனால் அதன் பிறகு சில நிமிடங்கள் சிவகார்த்திகேயன் மற்றும் மோகன் ஆகிய இருவரும் பேசிக் கொள்வது போல மிக மிக சுவாரசியமான காட்சி ஒன்று இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கிறது.
ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த கட்சியை எங்களால் படத்தில் இணைக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக டெலீட்டட் சீன்ஸ் வரும் பொழுது அந்த காட்சியை மக்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள் என்று ஒரு உச்சகட்ட சுவாரசிய விஷயத்தை இப்பொது ஓபன் செய்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
தளபதி விஜய் விரைவில் தனது 69வது பட பணிகளை துவங்கவுள்ளார், அந்த படத்தை பிரபல இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஏற்கனவே வினோத், பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு அரசியல் சார்ந்த கதையை கூறி, அதை கமலே தயாரிப்பதாக இருந்தது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான பிறகு அந்த படம் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த கதையை தான் தளபதிக்கு கூறியுள்ளார் வினோத் என்ற ஒரு தகவலும் உள்ளது.
இம்மாத இறுதியில் தனது கட்சி மாநாட்டை விக்ரவாண்டியில் நடத்தும் தளபதி விஜய், அந்த பணிகள் முடிந்தபிறகு தனது 69வது பட பணிகளில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி - அஜித் லிஸ்டுலையே இல்ல! அதிக வரி செலுத்தும் நடிகர்களில் 2-ஆவது இடத்தை பிடித்த விஜய்!