இந்நிலையில் திடீரென விஜய் ஆண்டனி திருப்பதிக்கு விசிட் அடித்த நிலையில், அங்கிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை மற்றும் கைவிசிறிகளை வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், 'பிச்சைக்காரன் 2' படத்தின் எதிரொளியா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய் ஆண்டனி திருப்பதிக்கு வந்த தகவல் அறிந்து பல ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க போட்டி போட்ட நிலையில், அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.