இந்நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நயன்தாரா, தன் குழந்தைகள் உயிர் மற்றும் உலகத்துடன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களுடன் எமோஷனல் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே. ஏற்ற, இறக்கங்கள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனை நேரங்கள் நிறைந்ததாக இந்த ஓராண்டு இருந்தாலும், அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வருவது நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாக இருந்தது.