மருமகளாக நயன்தாரா எப்படி?... முதன்முறையாக நயன் பற்றி மனம்திறந்து பேசிய விக்னேஷ் சிவனின் தாயார்

Published : Nov 25, 2022, 08:25 AM IST

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி, தனது மருமகள் நயன்தாரா, குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார்.

PREV
14
மருமகளாக நயன்தாரா எப்படி?... முதன்முறையாக நயன் பற்றி மனம்திறந்து பேசிய விக்னேஷ் சிவனின் தாயார்

நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 4 மாதங்களில் இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. வாடகைத் தாய் முறையில் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். தற்போது நடிப்புக்கு ரெஸ்ட் விட்டு குழந்தைகளை கவனித்து வருகிறார் நயன்.

24

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். தனது தாயின் ரியல் கேரக்டரை தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெறும் ராதிகா கதாபாத்திரமாக பயன்படுத்தி இருப்பார். அந்த அளவு பாசமான தாயாக இருந்து வரும் மீனாகுமாரி, தனது மருமகள் நயன்தாரா, குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்... இரண்டே படங்களில் ரூ.1600 கோடி வசூலை அள்ளிய பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா..!

34

அவர் கூறியதாவது : “நயன்தாரா வீட்டில் தலா 4 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 8 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு பணிப்பெண் மட்டும் ஒருநாள் சோகமாக இருந்ததை கவனித்த நயன்தாரா, அவரிடம் என்ன பிரச்சனை என விசாரித்தார். அப்போது அந்த பெண் தனக்கு 4 லட்சம் ரூபாய் கடன் இருப்பதை கூறினார்.

44

உடனடியாக 4 லட்சத்தைக் கொடுத்து கடனை அடைக்குமாறு சொன்னார் நயன்தாரா. இதையெல்லாம் நான் அருகிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அவர் நடிகை தானே, கொடுக்கலாம் என நினைக்கலாம். ஆனால் அப்படி கொடுப்பதற்கு ஒரு மனசு வேண்டும். அந்த பெண்ணும் நேர்மையாக உழைச்சிருக்காங்க.

நயன்தாராவின் அம்மா கேரளாவில் இருந்து வந்தபோது கூட அந்த பணிப்பெண்ணுக்கு தங்க வளையல் போட்டாங்க. நயன்தாரா வசிக்கும் குடியிருப்பை சுற்றி கேமரா இருக்கிறது. நயன்தாராவிடம் கேட்காமல் அந்த பெண் எதையும் செய்ய மாட்டார். யாரா இருந்தாலும் நம்பிக்கையா இருந்தா நல்லது கெட்டதை அவங்க பார்த்துப்பாங்க” என தனது மருமகள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவனின் தாயார்.

இதையும் படியுங்கள்... மகள் பிறந்து 14 ஆண்டுகளுக்கு பின் பிறந்த 2-வது குழந்தை... மீண்டும் தந்தையான மகிழ்ச்சியில் நடிகர் நரேன்

Read more Photos on
click me!

Recommended Stories