மலையாள நடிகரான நரேன், கடந்த 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து எஸ்.ஏ.சி இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, தங்கர்பச்சனின் பள்ளிக்கூடம், மிஷ்கினின் அஞ்சாதே என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து பாப்புலர் ஆனார் நரேன்.