போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த இவர் கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் முறையில் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் உலகம் என பெயரும் சூட்டி உள்ளனர்.
இந்நிலையில், ஹேக் செய்யப்பட்ட தனது டுவிட்டர் பக்கம் மீண்டும் மீட்கப்பட்டு உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அதோடு ஹேக் செய்தவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “என்னுடைய டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுவிட்டது. கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் நிம்மதியாக இருந்தேன். ஹேக் செய்தவர்களுக்கு நன்றி, அப்ப அப்ப இந்த மாதிரி பண்ணுங்க” என குறிப்பிட்டுள்ளார்.