இந்த இரண்டு திரைப்படங்களை மட்டுமே தான் இயக்கியிருக்கிறார் என்றாலும், இப்போது தனது மூன்றாவது திரைப்படமாக "வேட்டையடன்" என்ற படத்தை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வருகிறார் ஞானவேல். இந்த திரைப்படத்தின் உச்சகட்ட சுவாரசியமாக, முதல் முறை பிரபல நடிகர் அமிதாப்பச்சனை தமிழில் அறிமுகம் செய்த பெருமை ஞானவேலை சேர்ந்திருக்கிறது. பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.
கங்குவா திரைப்படமும் இதே நாள் வெளியாகவிருந்த நிலையில், பின் அந்த ரிலீஸ் தேதியிலிருந்து தங்களுடைய கங்குவா திரைப்படம் விலகிக்கொள்வதாக நடிகர் சூர்யாவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.