ஒருவழியா டப்பிங் ஆரமிச்சாச்சு; விடுதலை பார்ட் 2 ஆன் தி வே - ஆனா அதுலயும் ஒரு ட்விஸ்ட் வைக்கும் வெற்றி!

First Published Oct 10, 2024, 10:27 PM IST

Vetrimaaran Viduthalai : விடுதலை படம் முன்பு அறிவித்ததை போலவே டிசம்பர் மாதத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Viduthalai part 2

இயக்குனர் பாலு மகேந்திரா மீது கொண்ட அன்பின் காரணமாக, திரைத்துறையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் வெற்றிமாறன். ஒரு சில திரைப்படங்களில் இவர் சிறு சிறு கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த 2007ம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "பொல்லாதவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை இயக்குனராக தொடங்கினார்.

லீக் ஆனது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களின் சம்பள பட்டியல்! இந்த 2 பேருக்கு தான் ஜாக்பாட்!

Polladhavan

இவர் இயக்கிய முதல் திரைப்படத்திற்காகவே பிரபல விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த நிலையில், தொடர்ச்சியாக தனது அடுத்த திரைப்படத்தை உருவாக்க தொடங்கினார். கடந்த 2011ம் ஆண்டு மீண்டும் நடிகர் தனுஷை வைத்து "ஆடுகளம்" என்கின்ற திரைப்படத்தை கொடுத்தார். இந்த திரைப்படத்தில் கதையின் ஓட்டம் மிக சீராக அமைக்கப்பட்டதோடு, பாடல்களும் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது.

Latest Videos


Aadukalam

குறிப்பாக "யாத்தே யாத்தே" என்கின்ற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த பாடலுக்கான வரியை எழுதியவர் பாடல் ஆசிரியர் சினேகன் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாமல் "ஆடுகளம்" திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது. சைமா, விஜய் அவார்ட்ஸ் மற்றும் பிலிம்பேர் போன்ற விருதுகளும் இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

ஆடுகளம் திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் திரைத்துறை பக்கம் வராமல் இருந்த வெற்றிமாறன், சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து நடிகர் அட்டகத்தி தினேஷை வைத்து அவரே தயாரித்து வெளியிட்ட திரைப்படம் தான் "விசாரணை". இந்த திரைப்படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. விசாரணை திரைப்படம் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று என்றால் அது நிச்சயம் மிகையல்ல. 

Viduthalai 2

தொடர்ச்சியாக "வடசென்னை", "அசுரன்" ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன், இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "விடுதலை" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். உண்மையில் இன்று நடிகர் சூரி, முழுமையாக ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறி இருக்கிறார் என்றால், அதற்கு மூலமுதற் காரணம் விடுதலை திரைப்படம் தான். இந்த நிலையில் அந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே விடுதலை படத்தின் இரண்டாம் பாக பணிகளை வெற்றிமாறன் தொடங்கினார். இருப்பினும் சுமார் ஓராண்டு காலம் கடந்துவிட்ட நிலையிலும் அந்த திரைப்படம் குறித்த பெரிய அளவிலான தகவல்கள் வெளிவராமல் இருந்தது.

இந்த நிலையில் அண்மையில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்பொழுது விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் இணைந்து விடுதலை 2 படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர். ஆகவே குறிப்பிட்ட தேதியில் டிசம்பர் மாதம் இறுதியில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. இருப்பினும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் நீளம் கருதி, அதை இரண்டு பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும், ஆகையால் விடுதலை படத்திற்கு மூன்றாம் பாகமும் உள்ளதாகவும் சில தகவல்கள் பரவி வருகிறது.

கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்த விஜய்யின் மனைவி சங்கீதா; ஏன்?

click me!