நடிப்பால் அசரடித்த சாவித்ரி; இயக்குனர் அவதாரம் எடுத்த ஒரே படம் எது தெரியுமா?

Ansgar R |  
Published : Dec 02, 2024, 06:20 PM IST

Actress Savitri : நூறு ஆண்டுகளை இந்த தமிழ் சினிமாவில் மிகசிறந்த நடிகையாக வலம்வந்தவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. மகத்தான பல சாதனைகள் படைத்த நடிகை அவர்.

PREV
14
நடிப்பால் அசரடித்த சாவித்ரி; இயக்குனர் அவதாரம் எடுத்த ஒரே படம் எது தெரியுமா?
Actress Savitri

இந்திய திரை உலகம் இருக்கும் காலம் வரையிலும் ஒரு நடிகையின் பெயர் உரக்க கூறப்படும் என்று கூறினால் அது நிச்சயம் சாவித்திரியின் பெயராகத் தான் இருக்கும். தமிழ் சினிமா என்பதை தாண்டி இந்திய திரையுலகமே மிரண்டு பார்த்த ஒரு மெகா ஹிட் நடிகை தான் சாவித்திரி. கடந்த 1934ம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 17வது வயதிலிருந்து நடிக்க தொடங்கினார். கடந்த 1951ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான "பாதாள பைரவி" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து அதன் மூலம் தன்னுடைய கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் அவர்.

விதவிதமான கார் என ராஜ வாழ்க்கை வாழும் விக்ராந்த் மாஸ்ஸியின் சொத்து மதிப்பு!

24
Savitri

திரை உலகில் அறிமுகமான காலகட்டத்தில் பெரிய அளவில் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்து வந்த சாவித்திரிக்கு, கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியான "கல்யாணம் பண்ணிப்பார்" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தொடர்ச்சியாக அவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு களமிறங்கினார் அவர். அவருடைய திரை வாழ்க்கையில் 138 தெலுங்கு திரைப்படங்கள், 100 தமிழ் திரைப்படங்கள், ஆறு கன்னட மொழி திரைப்படங்கள், 5 ஹிந்தி மொழி திரைப்படங்கள் மற்றும் மூன்று மலையாள மொழி திரைப்படங்கள் என்று மொத்தம் 252 திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

34
Savitri Gemini Ganesan

பிரபல நடிகை சாவித்திரி தன்னுடைய ஐம்பதாவது வயதை தொடுவதற்கு முன்பாகவே காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கமே அதிகம் இருந்த காலகட்டத்தில் களமிறங்கி, "நடிகர் திலகம்" சிவாஜி கணேசனின் நடிப்புக்கு இணையாக, "நடிகையர் திலகம்" என்று அழைக்கப்பட்டவர் சாவித்திரி என்பது அனைவரும் அறிந்ததே. மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வளர்ந்தாலும் அவருடைய இறுதி காலங்கள் அந்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம். சில திரைப்படங்களை அவர் தயாரித்ததே இதற்கு மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

44
Nadikaiyar Thilagam

நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பலம் வந்தவர் சாவித்திரி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கடந்த 1968 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "சின்னாரி பப்பலு" என்கின்ற திரைப்படத்தை சாவித்திரி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை சில காலங்கள் கிழித்து அவர் தமிழ் மொழியிலும் இயக்கியது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் திரையுலகில் பயணித்த சாவித்திரி இயக்கிய ஒரே திரைப்படம் "சின்னாரி பப்பலு" என்ற பெயர்கொண்ட "குழந்தை உள்ளம்" என்கின்ற திரைப்படம் தான்.

ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல்; விஜய்க்கு கொடுத்து ஹிட்டாக்கிய யுகபாரதி!

click me!

Recommended Stories