தன்னுடைய வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகை மனோரமா, தமிழ் மொழியில் தான் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதை தவிர மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தினார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு அவருடைய உடல்நிலை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகள் அவர் மருத்துவமனையில் தான் தன்னுடைய இறுதி நேரத்தை செலவிட்டார். இந்த சூழலில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இரவு 11.20 மணிக்கு தன்னுடைய 78வது வயதில் மனோரமா காலமானார். அப்போது முதல்வராக இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, "என்னுடைய மூத்த சகோதரி இன்று காலமானார். என்னை அம்மு என்று செல்லமாக அழைக்கும் வெகு சில நபர்களில் அவரும் ஒருவர். சிவாஜி கணேசன் நடிகர் திலகம் என்றால் சாவித்திரிக்கு அடுத்தபடியாக மனோரம்மா தான் நடிகையர் திலகம்" இன்று புகழாரம் சூட்டினார்.
உடன்பிறப்புகளோடு அஜித் மனைவி ஷாலினி கொண்டாடிய தீபாவளி! வைரலாகும் புகைப்படம்!