நக்கல் மன்னன்னா சும்மாவா? 20 வருட கடும் போராட்டம் - 50 கோடி ரூபாய் நிலத்தை மீட்ட கவுண்டமணி!

First Published Oct 8, 2024, 9:37 PM IST

Actor Goundamani : கோடம்பாக்கத்தில் உள்ள தனது நிலத்தை 20 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளார் மூத்த தமிழ் திரையுலக நடிகர் கவுண்டமணி.

Goundamani

நாடக நடிகராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நடிகர் தான் கவுண்டமணி. கடந்த 1960ம் ஆண்டுகளின் இறுதியில் தான் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தொடக்க காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த கவுண்டமணிக்கு, 1977ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான "16 வயதினிலே" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. "பத்த வச்சுட்டியே பரட்ட" என்று அவர் சொல்லும் அந்த வசனங்கள் இன்றளவும் மிகப் பெரிய அளவில் பிரபலம்.

சீரியலில் அண்ணன்; நிஜத்தில் காதலி! விஜய் டிவி ஹீரோயினுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்த வெற்றி வசந்த்!

Actor Goundamani

அதனை தொடர்ந்து 1980களின் துவக்கத்திலிருந்து கவுண்டமணியின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகரிக்க தொடங்கியது. 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் கவுண்டமணி. குறிப்பாக 1990களின் இறுதிவரை, தமிழில் ஒரு வருடத்தில் 30 திரைப்படங்கள் வெளியாகிறது என்றால், அதில் குறைந்தது 25 திரைப்படத்திலாவது கவுண்டமணி நிச்சயம் நடித்திருப்பார். மீதமுள்ள அந்த ஐந்து படங்களும் கூட கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்காததால் அவர் இல்லாமல் வெளியாகியிருக்கும் என்று கூறினாலும் அது மிகையல்ல. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் என்று யார் படமாக இருந்தாலும் இயக்குனர்கள் முதலில் ஹீரோக்களின் டேட்டுகளை வாங்குவதற்கு முன்னதாக, அதில் நடிக்கவிருக்கும் கவுண்டமணியின் கால்ஷீட் தான் முதலில் வாங்குவார்களாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட முதலில் என்னுடைய கால்ஷீட் இருக்கட்டும், முதலில் கவுண்டமணியின் கால் சீட்டை வாங்கிவிட்டு வாருங்கள் என்று நான் சொல்லுவாராம். அந்த அளவிற்கு பிஸியாக நடித்து வந்தவர் கவுண்டமணி.

Latest Videos


Goundamani Land

இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோடம்பாக்கத்தில் தன்னுடைய நிலம் ஒன்றை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் நடிகர் கவுண்டமணி. 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுக்கு இடையில் நளினி பாய் என்பவரிடமிருந்து கோடம்பாக்கத்தில் ஆற்காட்டு சாலையில் 5 மைதானங்கள் மற்றும் 454 சதுர அடி நீளம் கொண்ட நிலம் வாங்கப்பட்டது. அப்போதே சுமார் 3.58 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் (நிலத்தை வாங்கிய நிறுவனம்) என்ற நிறுவனம் அங்கு காம்ப்ளக்ஸ் கட்டுமான பணிக்காக ஒப்பந்தம் செய்தது. 
 

Goundamani Land issue

இருப்பினும் அந்த நிறுவனம் கட்டிடம் ஏதும் கட்டாமல் கடந்த 2004 ஆம் ஆண்டில் முழுமையாக அந்த கட்டுமான பணிகளை கைவிட்டது. இந்த சூழலில் அந்த நிலத்தை கவுண்டமணி வாங்கிய நிலையில், ஏற்கனவே அங்கு வளாகம் கட்ட திட்டமிட்ட நிறுவனம் வலுக்கட்டாயமாக கவுண்டமணியின் நிலத்திற்குள் நுழைந்து அவர் அந்த நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சதி செய்ததாக கூறப்படுகிறது. 

அதனையடுத்து கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2006ல் உயர் நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் மற்றும் அவர்களது ஆட்களுக்கு எதிராக நிரந்தரத் தடை விதிக்கக் கோரியும், உடைமை மற்றும் நிலத்தை மீட்டுத் தரக் கோரி மற்றொரு வழக்கும் தொடர்ந்தனர். சுமார் 20 ஆண்டுகளாக அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று கவுண்டமணிக்கு சாதகமாக அந்த வழக்கு தீர்ப்பாகி, அந்த நிறுவனம் உடனடியாக கவுண்டமணியிடம் அந்த இடத்திற்கான சாவியை ஒப்படைக்க ஆணையிட்டுள்ளது. 

ஏ.ஆர். ரகுமான் முதல்... மணிரத்னம் வரை 'பொன்னியின் செல்வன்' படத்திற்க்கு 4 தேசிய விருதுகள்!

click me!