ஏ.ஆர். ரகுமான் முதல்... மணிரத்னம் வரை 'பொன்னியின் செல்வன்' படத்திற்க்கு 4 தேசிய விருதுகள்!

First Published Oct 8, 2024, 7:18 PM IST

கடந்த ஆகஸ்ட் மாதம் 70-ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Poniyin Selvan

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (அக்டோபர் 8 ஆம் தேதி), புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் சினிமாவில் சிறந்த படைப்பு மற்றும் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பட்டியல்கள் கீழ் தேசிய விருது பெற்ற பிரபலங்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கப்பட்டு வருகிறது.

Poniyin Selvan

விருது விழா குறித்து வெளியான தகவலின் படி, இன்று மாலை 4:00 மணிக்கு தேசிய விருது விழா தொடங்கியது. இதில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன், குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் காதலியோடு சென்று கும்மாளம் போடும் அர்னவ்! வெளுத்து வாங்கிய மனைவி திவ்யா ஸ்ரீதர்!

Latest Videos


Poniyin Selvan

இந்த 70-ஆவது தேசிய விருது விழா நிகழ்ச்சியில்.... சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றதாக அறிவிக்கப்பட்ட மிதுன் சக்ரவர்த்திக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும் தென்னிந்திய திரையுலகில், தேசிய விருது அறிவிக்கப்பட்ட அனைத்து பிரபலங்களும் விருது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Poniyin Selvan

குறிப்பாக தற்போது வழங்கப்பட்டு வரும்,  70வது தேசிய திரைப்பட விருதுகளில்... பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும், சுமார் 4 தேசிய விருதுகளை பெற்றது.அதன்படி சிறந்த இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய விருது வழங்க பட்டது. இதை தொடர்ந்து சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தட்டிச் சென்றார். இதுதவிர சிறந்த ஒலியமைப்புக்கான விருதும் பொன்னியின் செல்வன் பாகம் 1-ல் பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல் சிறந்த தமிழ் படத்திற்கான விருதையும், பொன்னியின் செல்வன் முதல் பாகம் தான் வென்றுள்ளது. இதற்கான விருதுகளை, இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 4 பிரபலங்களும் பெற்றுக்கொண்டனர்.

தன்னை விட 20 வயது மூத்த ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய போகும் விக்ரம் மகள்!!

click me!