இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு தான் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி, ஜானி மாஸ்டர் சிறைக்கு சென்றார். பல சர்ச்சையான கருத்துக்கள் இதுகுறித்து தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், கடந்த வாரம் தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜாமீனுக்கு விண்ணப்பித்த அவருக்கு ஜாமினும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தேசிய விருது வழங்கும் விழாவிற்காக அவர் தயாராகி வந்த நிலையில் தான், அவருக்கு வழங்கப்பட விருந்த விருது நிறுத்தி வைக்கப்படுவதாகவும். இந்திய அரசிடமிருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பிதழும் ரத்து செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இந்த சூழலில் இன்று நடைபெற்ற 70வது தேசிய விருது வழங்கும் விழாவில், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம்பெற்ற "மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே" என்ற பாடலுக்காக ஜானி மாஸ்டர் இல்லாமல் தனியாக சதீஷ் மாஸ்டர் மட்டும் அந்த விருதை பெற்றுக் கொண்டார்.