பல வகையில் வெடித்த சர்ச்சை.. சிம்பிளாக நடந்த "பயில்வானின்" மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய பிரபலங்கள்!

First Published Sep 19, 2024, 11:04 PM IST

Bayilwan Ranganathan : பிரபல பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகரும் நடிகருமான மயில்வான் ரங்க நாதனின் மகளுக்கு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது..

Bayilvan Ranganathan

இளம் வயதிலேயே திரைத்துறையில் அறிமுகமாகி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் பயணித்து வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் பல முக்கிய பத்திரிகைகளிலும் செய்தியாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே பல சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் பேசி, இவர் அவ்வப்போது பெரும் பிரளயத்தை கிளப்புவதுண்டு. குறிப்பாக நடிகைகளின் அந்தரங்கம் குறித்து வெளிப்படையாக பல விஷயங்களை பேசி, இவர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஏன் ஒரு நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசுகிறீர்கள் என்று யாரேனும் கேட்டால், அவர்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறார்கள் ஆகையால் அவர்களைப் பற்றி பேச எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று பதில் கூறுவார்.

"நீங்க CWCல் பண்ணது தான் ரிட்டர்ன் வருது" இது தான் கர்மா மணிமேகலை - குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்!

Actor Palaniyappan

பல ஆண்டுகாலம் தொடர்ச்சியாக இவர் பிறரை தவறாக பேசுவதும், உச்ச நடிகைகள் பதிலுக்கு பயில்வான் ரங்கநாதனை அவதூறாக பேசுவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்தது. இந்த சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்பு, பிரபல நடிகை குயிலி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில், நடிகை ஷகிலாவோடு நேருக்கு நேர் வார்த்தை போர் நடத்தினார் ரங்கநாதன். அப்பொழுது பயில்வான் ரங்க நாதனின் மகள் வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவர் ஓரினசேர்கையாளர் என்றும் கேள்விப்பட்டதாக ஷகிலா கூறிய நிலையில், என் மகளைப் பற்றி தவறாக பேசாதீர்கள் நாக்கு அழுகிவிடும் என்று ஆதங்கத்தோடு அப்போது பேசியிருந்தார் பயில்வான்.

Latest Videos


Actor Parthiban

இந்நிலையில் தனது மனைவியின் அண்ணன் மகன் சிவா என்பவருக்கும் தன்னுடைய மகளுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் கலந்து கொண்ட விழாவில் திருமணம் நடந்து முடிந்ததாக கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் "அண்மையில் ஒரு நடிகை என் மகள் பற்றி மிகவும் தவறாக பேசியிருந்தார். அது என் குடும்பத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது, உடனே என் சம்பந்தி என்னிடம் பேசி, இந்த கல்யாணத்தை உடனடியாக நடத்தி முடித்து விட வேண்டும் என்று கூறினார். ஏற்கனவே என் மகளும் சிவாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில், அவர்களுடைய திருமணத்தை விரைந்து நடத்திவிட எண்ணினோம்" என்று அவர் கூறியிருக்கிறார்.

Politician Seeman

மேலும் கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடந்த தனது மகளின் திருமண விழாவில் இரு வீட்டார் அனைவரும் கலந்து கொண்டதாகவும், அரசியல் தலைவரும் இயக்குனரும் நடிகருமான சீமானும், பிரபல இயக்குனர் நடிகருமான பார்த்திபனும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். மேலும் சின்னத்திரை நடிகர் பழனியப்பன் இந்த திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

350 கோடி ப்ராஜெக்ட்.. கல்கிக்கே சவால் விடும் ஸ்கிரிப்ட் - ஆனாலும் ட்ராப் செய்த சூர்யா! ஏன்? என்ன படம் அது?

click me!