நானும் எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்குறது... ட்ரோல் செய்தவர்களை வெளுத்துவாங்கிய ராஷ்மிகா

First Published Nov 9, 2022, 9:06 AM IST

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தன்னை விமர்சித்தவர்களுக்கும், ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்து நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களாக தனக்கு எதிராக வரும் வதந்திகள் குறித்தும், தான் ட்ரோல் செய்யப்படுவது குறித்தும் இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ராஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்டிருப்பதாவது : “கடந்த சில மாதங்களாக சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்கின்றன. அவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன். ஏனெனில் நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன்.. இதனை நான் சில வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் ஆனால் சற்று தாமதமாகிவிட்டது.

நான் என் சினிமா பயணத்தை தொடங்கியதிலிருந்து  நிறைய வெறுப்பைப் பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களால் சூழப்பட்டிருக்கிறேன். நான் தேர்வு செய்த இந்த வாழ்க்கை மிகவும் சிக்கலானது என்பது எனக்குத் தெரியும். அனைவரும் என்னை ஆதரிக்க வேண்டும் என சொல்லவில்லை, பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லலாம் அதில் தவறில்லை. ஆனால் இப்படி ட்ரோல் செய்வது சரியல்ல.

நன் தேர்ந்தெடுத்துள்ள இந்த பணி பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக என்பது எனக்கு நன்றாக தெரியும். எனது படங்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியில்தான் எனக்கு அதிக அக்கறை உள்ளது. உங்களது மகிழ்ச்சிக்காக நான் இன்னும் கடினமாக உழைக்க தயார். ஆனால் ஒவ்வொரு முறையும் முன்னேறி செல்லும்போது தடைகள் வந்தால், என்னால் எப்படி சாதிக்க முடியும்?

சமூக வலைதளங்களில் இல்லாத விஷயங்களை விளம்பரப்படுத்துவது, கேலி செய்வது, பைத்தியக்காரத்தனமான கருத்துக்களை தெரிவிப்பது போன்றவை என் மனதை மிகவும் காயப்படுத்துகிறது. இவையெல்லாம் என் வேலையை செய்ய விடாமல் தடுக்கிறது. 

நேர்காணல்களில் நான் சொல்லும் சில விஷயங்கள் எனக்கே எதிராக மாறுவதையும் கண்டேன். சினிமாவில் எனக்குள்ள நட்பின் அடிப்படையில் பொய்யான கதைகளை பரப்புகிறார்கள். என்னைப்பற்றிய விமர்சனங்கள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமானவும் இருந்தால் நான் அவற்றை வரவேற்கிறேன், ஏனென்றால் அவை என்னை மாற்றிக்கொள்ளவும், மேம்படுத்தவும் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்... நம்பினேன்.. நீங்க கைவிடல! இது கனவா.. நிஜமானு தெரியல - ‘லவ் டுடே’வின் வேறலெவல் ஹிட் குறித்து பிரதீப் நெகிழ்ச்சி

ரொம்ப நாளா இதையெல்லாம் தவிர்த்துவிட்டு பொறுமையா இருந்தேன். ஆனா இப்போ இது எல்லைமீறிவிட்டது. இனிமேல் பதில் சொல்லலைன்னா  வேற எதாச்சும் எழுதுவாங்க. என்னை பலர் நேசிக்கிறார்கள், எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் என்னை முன்னோக்கி செல்ல உதவுகிறது. அவர்களுக்காகவே இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களை சந்தோஷப்படுத்துவதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என ராஷ்மிகா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வருகிறது. கீதா கோவிந்தம் படத்தில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மும்பையில் இருவரும் டேட்டிங் செய்வதாக பலவிதமான வதந்திகள் பரவின. அதோடு, ராஷ்மிகாவை தனிப்பட்ட முறையிலும் ட்ரோல் செய்து வந்தனர். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க தான் இந்த பதிவை அவர் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் அடித்த ஜாக்பாட்... அஜித் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய ஜிபி முத்து

click me!