நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான வரலட்சுமி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
24
இவர் நடிகை ராதிகா குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது : “சிலர் என்னிடம் ஏன் நீங்க ராதிகாவை அம்மானு கூப்பிடாம ஆண்ட்டினு கூப்பிடுறீங்கனு கேட்குறாங்க. நான் எதுக்கு ராதிகாவை அம்மானு கூப்பிடனும். அவங்க என் அப்பாவோட இரண்டாவது மனைவி. அவ்ளோ தான்.
34
நான் ராதிகா மீது கோபத்தில் இருப்பதாகவும், அவரை எனக்கு பிடிக்காது எனவும், நான் அவரை வெறுப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். அப்படி எதுவுமே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்கிறோம். அதனால் அவரை அம்மானு எப்படி கூப்பிட முடியும்.
44
என்னுடைய அம்மாவை தான் நான் அம்மானு கூப்பிட முடியும். ஒருவர் தான் அம்மாவாக இருக்க முடியும். சமூக வலைதளங்களில் வேலையில்லாத வெட்டி பசங்க எதையாச்சு சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க. அதுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது என படு போல்டாக பதிலளித்துள்ளார் வரலட்சுமி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.