ராதிகாவ நான் ஏன் அம்மானு கூப்பிடனும்... அவங்க எனக்கு ஆண்ட்டி தான் - ஓப்பனாக சொன்ன நடிகை வரலட்சுமி

First Published Jun 21, 2022, 8:12 AM IST

Varalaxmi sarathkumar : நான் எதுக்கு ராதிகாவை அம்மானு கூப்பிடனும். அவங்க என் அப்பாவோட இரண்டாவது மனைவி, அவ்ளோ தான் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான வரலட்சுமி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் நடிகை ராதிகா குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது : “சிலர் என்னிடம் ஏன் நீங்க ராதிகாவை அம்மானு கூப்பிடாம ஆண்ட்டினு கூப்பிடுறீங்கனு கேட்குறாங்க. நான் எதுக்கு ராதிகாவை அம்மானு கூப்பிடனும். அவங்க என் அப்பாவோட இரண்டாவது மனைவி. அவ்ளோ தான்.

நான் ராதிகா மீது கோபத்தில் இருப்பதாகவும், அவரை எனக்கு பிடிக்காது எனவும், நான் அவரை வெறுப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். அப்படி எதுவுமே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்கிறோம். அதனால் அவரை அம்மானு எப்படி கூப்பிட முடியும்.

என்னுடைய அம்மாவை தான் நான் அம்மானு கூப்பிட முடியும். ஒருவர் தான் அம்மாவாக இருக்க முடியும். சமூக வலைதளங்களில் வேலையில்லாத வெட்டி பசங்க எதையாச்சு சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க. அதுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது என படு போல்டாக பதிலளித்துள்ளார் வரலட்சுமி.

இதையும் படியுங்கள்... ‘நண்பர்’ அஜித் உடன் இணைந்து நடிக்கும் விஜய்.. சரவெடியாய் தயாராக உள்ள பேன் இந்தியா படம்- சொன்னது யார் தெரியுமா?

click me!