நிச்சயம் அதிசயம் நடக்கும்... காதல் வலிமையானது..! பரபரப்பை ஏற்படுத்திய வனிதாவின் ட்விட்!

First Published Aug 26, 2020, 4:51 PM IST

பரபரப்பை ஏற்படுத்திய நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கையில், பல கஷ்டங்கள் வந்த போதிலும் அனைத்தையும் மெல்ல மெல்ல சமாளித்து வெளியே வந்த வனிதாவுக்கு தற்போது மற்றொரு சோதனை வந்துள்ளது.
 

வனிதாவின் 3 ஆவது கணவர் பீட்டர்பாலுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
undefined
இந்த நிலையில் இதுகுறித்து, வனிதாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், நடிகை வனிதா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இந்த டுவிட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
undefined
’நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் எங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக தான் சோதனையைக் கொடுத்து வருகிறார், என்றாலும் நிச்சயம் அதிசயம் நடக்கும். நான் கடவுளை மிகவும் நம்புகிறேன்.
undefined
எங்கள் காதல் வலிமையானது, அது எங்களை கைவிடாது. அவருக்காக நானும் எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்’என்று கூறியுள்ளார்.
undefined
இதேபோல் இன்னொரு டுவீட்டில் ’திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரம் அல்லது காகிதம் அல்ல, அது உணர்வு பூர்வமானது. உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் விஷயம்., சிலருக்கு வேண்டுமானால் திருமணம் மற்றும் விவாகரத்து வெறும் பேப்பர் ஆக இருக்கலாம்’ என்று கூறியுள்ளார்
undefined
அதேபோல் இன்னொரு டுவிட்டில் ’எனது அன்புக்குரிய பீட்டர்பால் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி. அவர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
undefined
வாழ்க்கை மிகவும் குறுகியது. என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார். வனிதாவின் தொடர்ச்சியான இந்த டுவீட்டுக்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பலர் இவருக்கு ஆறுதலாக ட்விட் போட்டு வருகிறார்கள்.
undefined
click me!