ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வனிதா, பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, பீட்டர் பால் தான் வேண்டும் என அவரை காதலித்து 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டவர்.
undefined
இரண்டு கணவர்களை பிரிந்து இவர் மூன்றாவது நபராக ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அது அனைத்தையும் மிகவும் போல்டாக நின்று எதிர்த்தார்.
undefined
பீட்டர் பால் மனைவி எலிசபெத்தின் பிரச்சனை வந்த போது... அவருக்கு சப்போர்ட் செய்த, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலருக்கும் பளார் பதிலடிகளால் தெறிக்கவிட்டார்.
undefined
பிள்ளைகளின் சம்மதத்தோடு, தன் வாழ்க்கை துணையை தேடி, எளிமையான முறையில் அவர் வீட்டில் கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அதே நேரத்தில் இந்த திருமணம் செல்லாது என்பதையும் வனிதாவின் லாயர் தெரிவித்திருந்தார்.
undefined
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் இடியாக இறங்கியுள்ளது, பீட்டர் பாலுக்கு இருந்த புகைப்பழக்கமும், குடி பழக்கமும்.
undefined
இந்த குடி பழக்கத்தால் வந்த வினை, வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார் வனிதா. இனி அவர் தன் வாழ்க்கையில் இல்லை என்பதையும் வீடியோவில் அழுதபடி கூறினார், பீட்டர் பால் உடனான உறவுக்கும் முற்று புள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.
undefined
இந்நிலையில் வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’மீண்டும் காதல், இப்போது சந்தோஷமா? என்று பதிவு செய்து அதனை நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்து உள்ளார்.
undefined
இதை பார்த்து பலருக்கு செம்ம ஷாக், வனிதாவுக்கு மீண்டும் காதல் வந்து விட்டதா என்கிற சந்தேகத்தை எழுப்புவது போல் இந்த பதிவு உள்ளது என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்? இந்த பதிவுக்கு கமெண்ட் பகுதியையும் அவர் ஆஃப் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined