வேலூரில் பிறந்த வாணி ஜெயராம், தன்னுடைய கனவை அடைவதற்காக எடுத்த முயற்சிகள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. ஒரு இசை குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பின்னணி பாடகி வாய்ப்பை கைப்பற்றுவது என்பது தற்போதைய காலத்தை விட, அந்த காலத்தில் மிகவும் கடுமையான ஒன்றாகவே இருந்தது. தன்னுடைய கனவை அடைவதற்காக சில தியாகங்களையும் செய்து தான் முன்னணி பாடகியாக ஜொலித்தார் வாணி ஜெயராம் என்பது உங்களுக்கு தெரியுமா?