தமிழில் காலத்தால் அழியாத பல வெற்றிப்படங்களை இயக்கிவர் பாரதிராஜா. இவருக்கு தற்போது வயதாகிவிட்டதால், படம் இயக்குவதை தவிர்த்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பாண்டியநாடு, ராக்கி, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார் பாரதிராஜா.
இதனிடையே அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அஜீரனக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்த கவிஞர் வைரமுத்து, அவர் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பாரதிராஜா மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார் கலையுலகை ஆண்டு வருவார்” என வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... உள்நாட்டு சுற்றுப்பயணத்தை துவங்கிய சீயான்..எதற்காக தெரியுமா?