இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, நிலநடுக்கத்தால் சின்னாபின்னமான துருக்கி குறித்து கண்ணீர் மல்க கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கவிதை இதோ...
“துருக்கியின் கீழே
பூமி புரண்டு படுத்துவிட்டது
ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன
வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன
மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன
மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்
உலக நாடுகள்
ஓடி வரட்டும்
கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்”
இதையும் படியுங்கள்... துருக்கி விமான நிலையத்தை இரண்டாகப் பிளந்த நிலநடுக்கம்