சிலரோ ஒரு படி மேலே போய், காஷ்மீர் ஷூட்டிங்கின் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் திரிஷாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக திரிஷா லியோ படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் தகவலை பரப்பினர். லேட்டஸ்ட்டாக பரவிய தகவல் என்னவென்றால், காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாகவும், அங்கு குளிர் தாங்க முடியாமல் தான் நடிகை திரிஷா சென்னைக்கு திரும்பியதாகவும் கூறப்பட்டது.