இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய வடிவேலு, முதன்முதலில் கமிட் ஆன படம் தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய்சேகர் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்ததால், அதையே படத்துக்கு தலைப்பாக வைக்க முயற்சித்தனர். ஆனால் அதே தலைப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு படத்தை எடுத்ததால் வடிவேலு படத்துக்கு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என பெயரிட்டனர்.