நயன்தாரா தடுப்பூசி போட்டு கொண்டது உண்மையா? சர்ச்சையில் சிக்க வைத்த புகைப்படம்..!

First Published May 19, 2021, 12:39 PM IST

நடிகை நயன்தாரா கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி நேற்று போட்டு கொண்டதன், புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்த நிலையில்... உண்மையில் நயன்தாரா ஊசி போட்டு கொண்டாரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த புகைப்படம்.

தமிழ் திரையுலகில் தற்போது டாப் காதல் ஜோடியாக வலம் வருவது நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களுடைய காதல் ஜோதி ஒளிவீசி வருகிறது.
undefined
ஷூட்டிங், ஃபாரின் டூர் என நயன்தாரா எங்கு சென்றாலும் விக்கி இல்லாமல் போவது கிடையாது. இதுதொடர்பான ஏராளமான போட்டோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
undefined
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்வது மட்டுமே மக்களை கொரோனா தொற்றிடம் இருந்து மக்களை காப்பாற்றும் என, மத்திய - மாநில அரசுகள் தெரிவித்து வருவதால், பலர் தடுப்பூசி போட்டு கொண்டு வருகிறார்கள்.
undefined
அந்த வகையில் நேற்று, நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் ஆகியோர்... சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு ஜோடியாக வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
undefined
இந்நிலையில் நயன்தாரா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் நர்ஸ் விரல்கள் மட்டுமே தெரிகிறதே தவிர, ஊசி தெரியவே இல்லை. எனவே நெட்டிசன்கள் பலர், உண்மையிலேயே நயன்தாரா ஊசி போட்டு கொண்டாரா? என சந்தேகத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
undefined
இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்க ஊசி போட்டுக்கொண்டது தெரிவித்து போல், புகைப்படம் வெளியிட்டு நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
undefined
சமீபத்தில் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்து கொண்டு சென்னை வந்த நயன், தற்போது காதலருடன் ஓய்வில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!