இளையராஜா மதியம் ஒரு பாடல் ரெகார்ட் செய்ய வேண்டும் என கூறி வாலியை வர வழைத்துள்ளார். 12 மணிக்கு மேல் தான் வாலி ஸ்டுடியோவுக்கு சென்றாராம். அப்போது கங்கை அமரன் இயக்கி வரும் வில்லுபாட்டுக்காரன் படத்திற்கு, 2 மணிக்குள் ஒரு பாடலை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என ராஜா கூறிய நிலையில்... வழக்கமான பாடல்களை போல் இல்லாமல், இல்ல பாடல் உதடு ஒட்டாத வார்த்தைகளை கொண்டு எழுத வேண்டும் என கூறியுள்ளார். இது மிகப்பெரிய சவால் என்றாலும் சில மணி நேரத்தில்...
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே.... என்கிற பாடலை எழுதி கொடுத்துள்ளார்.