ஒரு பாட்டு.. நாலு சிங்கர்ஸ்
தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த மலையாள இயக்குனர் தான் பிரியதர்ஷன். தமிழில் "லேசா லேசா", "சிநேகிதியே", "பொய் சொல்ல போறோம்", "நிமிர்" போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்றவர் அவர். ஏற்கனவே மலையாள மொழியில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி புகழின் உச்சியில் பயணித்து வந்த அவர், தமிழில் முதல் முதலில் இயக்கிய திரைப்படம் தான் கடந்த 1991ம் ஆண்டு நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியான "கோபுர வாசலிலே" என்கின்ற திரைப்படம்.
இந்த திரைப்படத்திற்கும் இசை இளையராஜா தான், பாடலுக்காக மிகப்பெரிய அளவில் போற்றப்பட்ட படங்களில் இந்த திரைப்படங்கள் ஒன்று. ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் நேர்த்தியான பல காட்சிகளை இந்த திரைப்படத்தில் கொடுத்திருப்பார். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இந்த திரைப்படத்தில் வாலி வரிகளில் ஒலித்த நான்கு பாடல்களில் ஒன்றுதான் "தேவதை போல் ஒரு பெண்ணொன்று வந்தது தம்பி உன்னை நம்பி" என்கின்ற பாடல்.
இந்த பாடல் கார்த்தி தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து பாடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆகையால் இந்த பாடல் நான்கு நண்பர்களுக்கு இடையே நடக்கும் பாடலாக அமைந்திருப்பதால் அதில் நான்கு வித்தியாசமான குரல்களை சேர்த்து அசத்தியிருப்பார் இளையராஜா. மனோ, மலேசியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி மற்றும் சுரேந்தர் ஆகிய நால்வருடைய குரலில் தான் இந்த பாடல் ஒலித்தது. இப்போது இந்த பாடலை கேட்கும் பொழுது கூட நான்கு பெரிய பாடகர்கள் கோரசாக பாடுவது அவ்வளவு இனிமையை கொடுக்கும். அந்த காலகட்டத்தில் மெகா ஹிட் ஆன பாடல்களில் இதுவும் ஒன்று.
Bigg Boss Tamil Season 8: ரஜினியின் சிபாரிசு? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பிரபல காமெடி நடிகரின் மகன்!