கைவிரித்த வாலி! 3 நாள் 100 பேரை காக்க வைத்த ஷங்கர்; இந்தியன் பட பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம்?

First Published Sep 27, 2024, 4:58 PM IST

இந்தியன் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை... வாலியிடம் இருந்து இயக்குனர் ஷங்கர் எப்படி வாங்கினார் என்பதை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ள நிலையில், இந்த ஃபிளாஷ் பேக் தகவல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Vaali about Director Shankar

கவிஞர் வாலியை தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். தயாரிப்பாளரிடம் பேசி ஒரே ஒரு பாடல் வாங்கி தருவதாக கூறி... பின்னர் அவர் இசையமைத்த பல படங்களில் இடம்பெறும் பாடல்களை வாலிக்கே கொடுக்க வைத்தார். இதுபற்றி தன்னுடைய பாராட்டு விழாவின் போது, வாலி நினைவு கூர்ந்திருப்பார். எம்.எஸ்.வி முன்பு நின்று பேசும் போது... "நான் நீங்கள் போட்ட விதை... எனக்கான பாராட்டு விழாவில் முதல் ஆளாக நீங்கள் தான் இருக்க வேண்டும். அதை பார்த்து சந்தோஷ பட வேண்டும். அது தான், நான் உங்களுக்கு செய்யும் நன்றி கடன் என உணர்வு பூர்வமாக பேசி இருப்பார். 
 

Vaali About Song

மேலும் எம்.எஸ்.வி-யை பார்க்கும் வரை சோத்துக்கே எனக்கு வழி இல்லை. எம்.எஸ்.வி-யால் வாய்ப்புகள் வர துவங்கியதும், சோறு தின்னவே எனக்கு நேரம் இல்லை என்பதையும் கவிதை துவமாய் கூறி இருந்தார் வாலி. எம்.ஜி.ஆரின் 64, படங்களுக்கும் சிவாஜியின் 80 படங்களுக்கும் பாடல் எழுதியுள்ள வாலி... நாகேஷ், சந்திர பாபு, ஜெமினி கணேசன், ஜெய் ஷங்கர் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களுக்கும்... விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த் என மொத்தம் 3 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்கு உரியவர். தமிழ் சினிமாவில் சுமார் 15,000-திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வாலி, சில திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை இவர் நடித்த படங்களாகும். மேலும், 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும், வாலி நடித்துள்ளார். 

31 வயது நடிகையுடன் டேட்டிங் பண்ணும் சிம்பு! காதலுக்கு கிரீன் சிக்னல்.. விரைவில் திருமணம்!
 

Latest Videos


Director Shankar

பாடல்கள் எழுதுவதை தாண்டி, அம்மா, அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜர் காவியம் என சுமார் 16 புத்தகங்களை எழுதி உள்ளார். எம்.எஸ்.வி மற்றும் இளையராஜாவிற்கு அதிக பட்ச பாடல்களை எழுதியுள்ள வாலி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த சில படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். அப்படி இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. 

வாலி கொடுத்த பழைய பேட்டி ஒன்றில்... "நீங்கள் ஷங்கருக்கு எழுதும் பாடல்கள் மட்டும் எப்படி, ஹிட் பாடல்களாக மாறி விடுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது". இதற்க்கு பதில் அளித்த வாலி "ஷங்கர் எப்போதுமே... நீங்க இப்போவே பாடல் எழுத வேண்டும் என கட்டாய படுத்த மாட்டார் என கூறி 'இந்தியன்' படத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். 

Maya Machindra Song:

'இந்தியன்' படத்தில் வாலி எழுதி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற 'மாயா மச்சீந்திரா' பாடலை படமாக்க... ஷங்கர் 100 டான்சர்களை வரவைக்கு மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்து விட்டு, பாடல் வேண்டும் என என்னிடம் சொன்னார். நான் அப்போது எனக்கு இப்போதைக்கு ஒன்னும் தோன்றவில்லை என கூறினேன். அவர் என்னை அவரச படுத்தாமல்... நீங்கள் 3 நாள் கூட டைம் எடுத்துக்கொள்ளுங்கள் நான் அவர்களை வெயிட் பண்ண சொல்கிறேன் என கூறி, அந்த 100 போரையும் காக்க வைத்தார். நான் மூன்று நான் கழித்து தான் 'மாயா மச்சீந்திரா' பாடலை அனுப்பினேன். அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது என கூறியுள்ளார்.

1994-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை எஸ்.பி.பி பால சுப்ரமணியத்துடன் இணைந்து, ஸ்வர்ணலதா பாடி இருப்பர். கமலை ஒரு மாயாவி போல ஷங்கர் இந்த பாடலில் காட்டி இருப்பார்.  இந்த படத்தில் வாலி மூன்று பாடல்களை எழுத, வைரமுத்து 2 பாடல்களை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜூனியர் என்டிஆரின்... 'தேவாரா' தேறுமா? தேறாதா? விமர்சனம்!
 

click me!