கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை இயக்கம், எழுத்து, இசை, வசனம் மற்றும் நடிப்பு என்று பன்முகத்திறமையோடு வளம் வந்து கொண்டிருக்கும் வெகு சில கலைஞர்களில் ஒருவர் தான் பாக்யராஜ். கடந்த 1979ம் ஆண்டு வெளியான "சுவர் இல்லாத சித்திரங்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் இவர் களம் இறங்கினார். ஆனால் அதற்கு முன்னதாகவே இயக்குனர் பாரதிராஜாவின் படங்களில் நடிகராகவும், எழுத்தாளராகவும் இவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் பயணித்து வரும் பாண்டியராஜன், பார்த்திபன் மற்றும் லிவிங்ஸ்டன் போன்ற பலருக்கு ஆசானாக விளங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்னதாகவே நாடகங்களிலும் கதை எழுதிய பாக்கியராஜ் கொஞ்சம் ஸ்ட்ரெயிட் பார்வேர்ட் என்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலாக 1981ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான "இன்று போய் நாளை வா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இளையராஜாவோடு இணைந்தார் பாக்கியராஜ்.
இந்த பாடல்களை எல்லாம் எழுதியவர் கங்கை அமரனா! இவ்வளவு தான் தெரியாம போச்சே?