இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ஸ்பெஷல் தான். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 19.5 ஓவர்களிலேயே 147 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியாவின் வெற்றியை பலரும் கொண்டாடி வரும் நிலையில், இந்த போட்டியை காண சினிமா பிரபலங்கள் சிலரும் துபாய் ஸ்டேடியத்திற்கு சென்றனர். அதில் ஒருவர் விஜய் தேவரகொண்டா, அவர் நடித்த லைகர் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீசான நிலையில், நேற்றைய போட்டியை காண ஸ்டேடியத்திற்கு விசிட் அடித்த விஜய் தேவரகொண்டாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.