பெங்களூருவை சேர்ந்தவரான சுகேஷ் சந்திரசேகர், சினிமா பிரபலங்களையும், அரசியல் தலைவர்களையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பண மோசடி செய்தபோது போலீசிடம் வசமாக சிக்கினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.