"மர்மயோகி முதல் தேவர் மகன் 2 வரை" கமல் கடைசி நொடியில் கைவிட்ட டாப் 4 டக்கர் படங்கள்!

First Published Sep 28, 2024, 7:55 PM IST

Ulaga Nayagan Kamal : மருதநாயகம் மட்டுமல்ல, உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாக துவங்கிய வேறு சில படங்களும் பல காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது.

Marmayogi Movie

திரைப்படங்கள் என்று வரும் பொழுது அதில் பலவிதமான சோதனைகளை மேற்கொள்ள ஆசைப்படும். மனிதர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். அந்த வகையில் தன்னுடைய "ஆளவந்தான்" மற்றும் "விருமாண்டி" ஆகிய திரைப்படங்களை முடித்த பிறகு, கமல்ஹாசன் அறிவித்த திரைப்படம் தான் "மர்மயோகி". ஒருவேளை இந்த திரைப்படம் வெளியாகி இருந்தால் "தசாவதாரம்" திரைப்படத்திற்கு முன்னதாகவே இது வெளியாகி இருந்திருக்கும். ஹிந்தி மற்றும் தமிழ் என்று இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த திரைப்படத்தை உருவாக்க கமலஹாசன் முடிவு செய்தார். 

ஏழாம் நூற்றாண்டில் நடைபெறும் ஒரு சுவாரசியமான கதையை அலசும் கதையாக இது இருந்திருக்கும். மோகன்லால், வெங்கடேஷ், ஹேமா மாலினி, திரிஷா மற்றும் சுஷ்மிதா சென் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. மேலும் கமலின் ராஜ் கமல் நிறுவனத்தோடு இணைந்து ரஜினியின் "குசேலன்" படத்தை தயாரித்த பிரமிட் சைமிரா நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த நிலையில் தான், குசேலன் படத்தால் ஏற்பட்ட நஷ்டம், பிரமிட் சைமிரா நிறுவனத்தை மர்மயோகியில் இருந்து விலக வைத்தது. பின் அப்படத்தில் இருந்து உலகநாயகன் கமல்ஹாசனும் விலகி தன்னுடைய உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

"ஆண்டவரே".. அமெரிக்கா போனது இதற்குத்தானா? AI-யின் உதவியால் மீண்டு வருகிறதா மருதநாயகம்?

Yavarum kelir

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் தான் "யாவரும் கேளிர்". பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த ஒரு கதையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை திரிஷாவிடம் பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றது. 

கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்ட நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கமல் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகத் தொடங்கிய மற்றொரு திரைப்படம் தான் "மன்மதன் அன்பு" என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos


Sabash Naidu

2008ம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் "தசாவதாரம்". இந்த திரைப்படத்தில் மொத்தம் 10 கதாபாத்திரங்களில் தோன்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருப்பார் உலக நாயகன் கமல்ஹாசன். அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது "பல்ராம் நாயுடு" என்கின்ற ஒரு கதாபாத்திரம் என்றால் அது மிகையல்ல. 

இந்நிலையில் "சபாஷ் நாயுடு" என்று பெயரில் பல்ராம் நாய்டுவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அதற்காக தனியே ஒரு கதை அமைக்கப்பட்டது. டி.கே ராஜ்குமார் இந்த படத்தின் இயக்குனர் பணிகளை மேற்கொண்ட நிலையில், கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்ற வந்தார். வெளிநாடுகளில் இப்படத்திற்கான ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.  அதன் பிறகு உடல் நல குறைவு காரணமாக இயக்குனர் ராஜ்குமார் இந்த திரைப்படத்திலிருந்து வெளியேறி நிலையில் கமலஹாசன் இந்த திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. பின் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் டிலே ஆகி வந்ததால் இறுதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thevar Magan 2

கமல் நடிப்பில் மெகா ஹிட் ஆன பல படங்களில் கடந்த 1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான "தேவர் மகன்" திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரித்து வழங்கியது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கமலஹாசன் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி "தேவர் மகன்" படத்தில் இரண்டாம் பாகம் உருவாக அறிய வாய்ப்புகள் இருப்பதாக கூறியிருந்தார். 

இந்த திரைப்படத்தின் தலைப்பு அப்போது மிகப்பெரிய சர்ச்சுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விஜய் சேதுபதி தேவர் மகன் படத்தில் மாயன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து நாசரின் மகனாக நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் இறுதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"டார்ச்சர் பண்ணது அவங்க தான்".. புஷ்பா பட இயக்குனரை சப்போர்டுக்கு இழுக்கும் ஜானி மாஸ்டர்!

click me!