இந்நிலையில், நேற்று சென்னையில் லால் சிங் சத்தா படத்தின் பிரஸ் மீட் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின், அமீர்கான், நாக சைதன்யா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது உதயநிதியிடம் பத்திரிகையாளர் ஒருவர், 60 ஆண்டுகளாக இந்தி திணிப்பை தமிழகம் எதிர்த்து வருகிறது. இந்தி தெரியாது போடானு சட்ட போடுறோம், பானி பூரி விற்பவர்களை கிண்டல் செய்கிறோம். ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்யும் முதல் இந்தி படம் இதுதான். இதற்கு நிறைய விமர்சனங்கள் வரும், அதனை எப்படி பார்க்குறீங்க, இந்த படத்தை எப்படி ரிலீஸ் செய்ய சம்மதிச்சீங்க என கேட்டார்.