வாரிசுக்கு முட்டுக்கட்டை போடும் தெலுங்கு திரையுலகம்... தலையிடுமா ரெட் ஜெயண்ட்ஸ்? - உதயநிதி ஓபன் டாக்

First Published Nov 20, 2022, 3:15 PM IST

விஜய்யின் வாரிசு பட பிரச்சனை குறித்து நடிகரும், எம்.எல்.ஏ.வும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக பேசி உள்ளார்.

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறுபுறம் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்கிற குழப்பமும் நீடித்து வருகிறது. ஏனெனில் இப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்க முடியாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

அந்த நாளில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க முடியும் என்றும் விஜய்யின் வாரிசு திரைப்படம் டப்பிங் படம் என்பதால் அதற்கு குறைந்த அளவிலான தியேட்டர்களே ஒதுக்கப்படும் என்கிற அறிவிப்பு கோலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தெலுங்குத் திரைப்படங்களை வெளியிடவிடமாட்டோம் .! விஜயின் வாரிசு படத்திற்கு ஆதரவாக களம் இறங்கிய சீமான் எச்சரிக்கை

குறிப்பாக நடிகர் சந்தானம், இயக்குனர் லிங்குசாமி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பினர். இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து நடிகரும், எம்.எல்.ஏ.வும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக பேசி உள்ளார்.

கட்டா குஸ்தி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட உதயநிதியிடம் வாரிசு பிரச்சனைக்காக பேச்சுவார்த்தை நடத்துவீர்களா அல்லது அங்கு ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தெலுங்கு திரையுலகில் போய் நான் எப்படி பேச முடியும் என கூறிவிட்டு இதில் தான் தலையிட முடியாது என்பதை சூசகமாக சொல்லிச் சென்றார் உதயநிதி.

இதையும் படியுங்கள்... ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்... டுவிட்டரில் டிரெண்டாகும் பனையூர் பிரியாணி

click me!